ராயனூர் நடுநிலைப்பள்ளியில் விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி

கரூர், ஜூலை 30: ராயனூர் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சீருடைகளை வழங்கினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் நடுநிலைப்பள்ளியில் விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ராமநாதன் வரவேற்றார். மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ உட்பட அனைத்து அதிகாரிகளும், பள்ளி ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் ஞானஒளி நன்றி கூறினார்.

The post ராயனூர் நடுநிலைப்பள்ளியில் விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: