பான்மசாலா விற்ற 2 கடைகளுக்கு சீல்

தர்மபுரி, ஜூலை 29: தர்மபுரி மாவட்டம் ஏரியூர், பெரும்பாலையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்த 2 டீக்கடைகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானுசுஜாதா மேற்பார்வையில், மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், போலீசாரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி தலைமையில், எஸ்எஸ்ஐ சிவபெருமாள் மற்றும் போலீசார் நேற்று ஏரியூர், பெரும்பாலை ஆகிய பகுதிகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட மளிகை மற்றும் பெட்டிக்கடை, டீக்கடைகளில் சோதனை நடத்தினர். இதில் 2 பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இரு கடைகளையும் பூட்டி சீல் வைத்து, உரிமையாளர்களுக்கு தலா ₹25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

The post பான்மசாலா விற்ற 2 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: