மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

 

திருப்பூர், ஜூலை 29: திருப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பாக ராக்கியாபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு கிளைச் செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். தொடர்ந்து ராக்கியாபாளையம் ஏடி காலனியில் தொடங்கிய நடை பயணம் காங்கயம் சாலை, வள்ளியம்மை நகர், மணியகாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக ராக்கியாபாளையத்தில் நிறைவடைந்தது.

இந்த பிரசார இயக்கத்தில் ஒன்றிய அரசு அமல்படுத்திய மூன்று குற்றவியல் சட்டங்களில் உள்ள பாதிப்புகள் குறித்த புத்தகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டிய அடிப்படை பிரச்னைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இதே போல் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பிரசார இயக்கம் நடைபெற்றது.

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: