ஈரோடு லாட்டரி விற்றவர் கைது

 

ஈரோடு, ஜூலை 29: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட சின்னமாரியம்மன் கோயில் பகுதியில் நேற்று முன் தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சதேகத்துக்கிடமாக நடமாடிய நபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர், கருங்கல்பாளையம், குமரன் வீதியை சேர்ந்த இளங்கோவன் (60) என்பதும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மா நில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து, பிற மாநில லாட்டரி சீட்டுகள் 5ஐயும் பறிமுதல் செய்தனர்.

The post ஈரோடு லாட்டரி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: