பட்டாக்கத்தியால் வெட்டுவது போல ரீல்ஸ் 5 சிறுவர்கள் கைது

சென்னை: காசிமேடு பகுதியில் சிறுவர்கள் கூட்டாக சேர்ந்து பட்டாகத்தியை வைத்து ஒரு சிறுவனை வெட்ட முயற்சிப்பது போலவும், அதற்கு அந்த சிறுவன் ‘வெட்டாதீங்க..வெட்டாதீங்க..’ என்று கெஞ்சுவது போலவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதன் அடிப்படையில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் 5 சிறுவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், காசிமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் 17 வயது தம்பி மற்றும் அவருடைய கூட்டாளிகள் என 5 பேர் தான் இந்த வீடியோவை எடுத்து, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் விளையாட்டாக வீடியோவை எடுத்தோம் என்றனர். சிறுவர்கள் மீது ராயபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், ஆதம்பாக்கம் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. 5 பேரையும் கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

The post பட்டாக்கத்தியால் வெட்டுவது போல ரீல்ஸ் 5 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: