கார் மோதி ஒருவர் படுகாயம்

 

நத்தம், ஜூலை 27: நத்தம் அருகே எல் வலையபட்டியை சேர்ந்தவர் அழகன் (55) கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஜூலை 24ம் தேதி வலையபட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே திருச்சி மாவட்டம் பொன்மலைபட்டியை சேர்ந்த ரமேஷ் (53) ஓட்டி வந்த கார் அழகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் ஜிஹெச்சில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கார் மோதி ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: