தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், 2வது மண்டல அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில், 700 தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் அனைத்து பணியாளருக்கும் 15 வகையான பரிசோதனைகளும், மொத்தம் 30 மருத்துவ ஆய்வக பரிசோதனைகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பொது மருத்துவம், பெண்கள் நல மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவ சிகிச்சை, மனநல மருத்துவம், இதய சிகிச்சை, கல்லீரல் மருத்துவம், சிறுநீரக சிகிச்சை, போதை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை, எலும்பு மூட்டு சிகிச்சை, காது மூக்கு தொண்டை, கண் மருத்துவம், அறுவை சிகிச்சை, ஊட்டச்சத்து சிகிச்சை, காசநோய், தொழுநோய் கண்டறியும் சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை, சித்த மருத்துவம் ஆகிய 18 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. தூய்மை பணி மேற்கொள்ளும் 30 ஒப்பந்த பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகர்நல அலுவலர் அருள் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: