எத்தியோப்பியாவில் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 257ஆக உயர்வு

அடிஸ் அபாமா: எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 257ஆக அதிகரித்துள்ளது. எத்தியோப்பியாவில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 21ம் தேதி கெஞ்சோ ஷாச்சா கோஸ்டி மாவட்டம் கோபா மண்டலத்தில் கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மண்ணில் புதையுண்டு பலியானவர்களின் எண்ணிக்கை 257ஆக அதிகரித்துள்ளது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

The post எத்தியோப்பியாவில் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 257ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: