குட்காவை பதுக்கி வைத்து விற்க முயன்றவர் மீது வழக்கு

 

கரூர், ஜூலை 26: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட டவுன் அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார், மதுவிலக்கு போலீசார் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.

மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மனோகரா கார்னர் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீசார் சோதனை மேற்கொண்ட போது, இந்த பகுதியை சேர்ந்தவர் ஒருவர் குட்கா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடம் இருந்து ரூ.100 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குட்காவை பதுக்கி வைத்து விற்க முயன்றவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: