கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடிகளால் படுகொலையோ செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கின் பின்னணி மிகவும் பெரிதாக உள்ளது என்ற கோணத்தில் விரிவுபடுத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை குற்றவாளிகளுக்கு பண உதவி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை அப்பகுதியில் கந்துவட்டி கொடுத்து வந்ததாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை புலால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு வழக்கிலும் அஞ்சலை கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை மேலும் ஒரு வழக்கில் கைது appeared first on Dinakaran.