நீலகிரி: குன்னூர், உதகை பகுதியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், கேத்தி காவல் நிலையத்தின் மீது பிரமாண்ட மரம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்தில் காவலர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மரத்தை அகற்றுவதற்கு தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர்.