அகரம் அறக்கட்டளை தற்போது வரை 6 ஆயிரம் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றி உள்ளதாக கூறிய சூர்யா ஒருவருக்கு வழிகாட்டுவது மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்றார். தற்போது இருக்கும் பிரச்சனையை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டு வாழுங்கள் என மாணவர்களுக்கு அறிவுறுத்திய நடிகர் சூர்யா அகரம் உங்களுடைய பொறுப்பு ஒரு கோடி தேர் இழுப்போம் என்றார். முன்னதாக அகரம் அறக்கட்டளையில் பயின்ற மணிப்பூரை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கள் மாநிலத்தில் நடந்துவரும் பிரச்சனைகள் குறித்து கண்ணீர் மல்க பேசினார்.
The post ஏழை மாணவர்களின் போர்க் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: அகரம் அறக்கட்டளை சார்பில் +2 தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை ஏழை மாணவர்களிடையே நடிகர் சூர்யா உருக்கம் appeared first on Dinakaran.