தமிழ்நாடு செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக மாறும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி

கோவை: தமிழ்நாடு செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக மாறும் என்று கண்ணம்பாளையத்தில் செமிகண்டக்டர் நிறுவன திறப்பு விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கோவையை தொழில் மையமாக மாற்ற உள்ளதாகவும், மின்சார வாகன உற்பத்தி, ஜவுளி உள்ளிட்ட தொழில்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது எனவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசினார்.

The post தமிழ்நாடு செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக மாறும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி appeared first on Dinakaran.

Related Stories: