வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில்

 

குன்னம், ஜூலை 25: குன்னம் அடுத்த வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் லெப்பைகுடிக்காடு மெயின் ரோட்டில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு கழனிவாசல், வயலப்பாடி, கீழப்பெரம்பலூர், வயலூர், வசிஷ்டபுரம், திருமாந்துறை உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இதனால், தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் விவசாயம், கல்வி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறவும் வந்து செல்கின்றனர். இங்கு, பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக சிமெண்ட் கட்ட கட்டி அதன்மீது வைத்திருந்த சின்டெக்ஸ் மினி குடிநீர் தொட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டு, அதற்கான மேடை மட்டும் அப்படியே உள்ளது. இது குறித்து குன்னம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. புதிதாக வந்துள்ள மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

The post வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Related Stories: