கோட்டுச்சேரி அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மழைகோட்

 

காரைக்கால், ஜூலை 25: கோட்டுச்சேரி விஓசி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் மழைக்கோட்டுகளை எம்எல்எ சந்திரபிரியங்கா வழங்கினார்.காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் அமைந்துள்ள வி. ஒ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுவை அரசால் இலவசமாக வழங்கப்படும் மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு 42 மாணவர்களுக்கு மழை கோட் வழங்கினார். பின்னர் எம்எல்ஏ பேசும்போது, புதுச்சேரி மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

முன்பை விட கூடுதல் கவனம் செலுத்தி நீங்கள் நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை இலவசமாக அளித்து வருகிறார். லேப்டாப், மழைகோட்,சீருடைகள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் நன்கு படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியி்ல் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post கோட்டுச்சேரி அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மழைகோட் appeared first on Dinakaran.

Related Stories: