தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்

திண்டுக்கல், ஜூலை 25: திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகளுக்கு பின் கோயிலில் இருந்து புறப்பட்ட சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார், ஆண்டாள் தெப்பத்திற்கு எழுந்தருளி காட்சியளித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா நாமம் பாடி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வாசுதேவன், சுசீலா, கேப்டன் பிரபாகரன், ராமானுஜம், கோயில் செயல் அலுவலர் திருஞானசம்பந்தர், பட்டாச்சாரியார்கள் ரமேஷ், ராமமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

The post தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: