காவல்துறை வாகனங்கள் 30ம் தேதி ஏலம்

திருவள்ளூர், ஜூலை 25: திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு சம்பந்தப்பட்ட 2 சக்கர வாகனங்கள் 23 மற்றும் 4 சக்கர வாகனங்கள் 3 என மொத்தம் 26 வாகனங்கள் வரும் 30ம் தேதி காலை 10 மணியளவில் திருவள்ளூரில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே ஏலம் விடப்பட உள்ளன. வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கபபட்டுள்ளது.

வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முன் வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ₹1000, 4 சக்கர வாகனங்களுக்கு ₹5 ஆயிரமும் செலுத்தவேண்டும். அதற்கான டோக்கன் காலை 8 மணிமுதல் 10 மணிவரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனைவரி 12%, நான்கு சக்கர வாகனத்திற்கு 18% உடனடியாக செலுத்தி விடவேண்டும். வாகனத்தின் பொது ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு, அரசால் அங்கிகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வர வேண்டும். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை எலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

The post காவல்துறை வாகனங்கள் 30ம் தேதி ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: