பாகற்காய் விளைச்சல் அதிகரிப்பு

ராயக்கோட்டை, ஜூலை 24: ராயக்கோட்டை பகுதியில் ஒடையாண்டஅள்ளி, எச்சம்பட்டி, முத்தம்பட்டி, பண்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பாகற்காய் சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் நல்ல மழை பெய்ததால், கொடிகள் நன்றாக வளர்ந்து காய்பிடிப்பு அதிகரித்துள்ளது. விளைச்சலான பாகற்காயை ராயக்கோட்டை மார்க்கெட்டிலேயே விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள் சிலர் மொத்த கொள்முதலாக கிலோ ₹50க்கு வாங்கிச் செல்கின்றனர். பாகற்காய் தரமானதாக உள்ளதால், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய செலவு குறைவு என்பதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் ஆர்வமாக விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

The post பாகற்காய் விளைச்சல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: