வாசுதேவநல்லூரில் நாளை மின்தடை

சிவகிரி,ஜூலை 23: கடையநல்லூர் கோட்ட மின்விநியோகபிரிவு செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட நாரணாபுரம் உபமின் நிலையத்தில் நாளை (24ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், உள்ளார், நெற்கட்டும் செவல், சுப்பிரமணியபுரம், வெள்ளயானை கோட்டை, தாருகாபுரம், மலையடிக்குறிச்சி ஆகிய கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது. இந்த கிராமங்களில் மின் கம்பிகளில் தொடும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

The post வாசுதேவநல்லூரில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: