கொடைக்கானல் மலைச்சாலையில் 200 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து 4 பேர் படுகாயம்: தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி மீட்டனர்

கொடைக்கானல்: மதுரையில் இருந்து ஒரு காரில் சேகர், மனோஜ் உள்பட 4 பேர் கொடைக்கானல் வந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் கொடைக்கானல் மலைச்சாலையில் வாழைகிரி என்ற இடத்தில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து கொடைக்கானல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 4 பேரையும் கயிறு கட்டி இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கொடைக்கானல் மலைச்சாலையில் 200 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து 4 பேர் படுகாயம்: தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி மீட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: