நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்: வீடியோ வைரல்; வாலிபர் கைது

சேலம்: சேலம் அம்மாப்பேட்டை கிருஷ்ணன்புதூர் பகுதியைச் சேர்ந்த 39வயது பெண், அங்குள்ள பவர்லூம் பட்டறைக்கு வேலைக்கு சென்று வருகிறார். கடந்த 15ம் தேதி, அந்த பெண் வேலைக்கு சென்று விட்டு, மதியம் தனது வீட்டுக்கு நடந்து சென்றார். பின்னர், சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து மீண்டும் வேலைக்கு பட்டறைக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள தனியார் பள்ளி அருகே நடந்து சென்ற போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர், திடீரென அந்த பெண்ணை கட்டிப்பிடித்து, கீழே தள்ளி தகாத முறையில் ஈடுபட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அலறி கூச்சலிட்டார்.

சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று அப்பெண்ணை மீட்டனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண், வீராணம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பெண்ணிடம் தகாத முறையில் நடந்த நபர், மன்னார்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த கண்ணன்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்: வீடியோ வைரல்; வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: