கந்தர்வகோட்டை பகுதியில் பின் குறுவை நடவுக்கு நாற்று பறிக்கும் பணி

 

கந்தர்வகோட்டை, ஜூலை 21: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள அண்டனூர் ஊராட்சி வேலாடிபட்டி கிராமத்தில் விவசாய பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியில் எந்ததொரு தொழிற்சாலைகளும் இல்லாததால் இப்பகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகிறார்கள். தற்சமயம் குறுவை நெல் அறுவடை செய்துவரும் வேளையில் பின்குறுவை நடவு செய்ய நாற்றங்காலில் இருந்து நாற்று பயிரை பறித்து வருகின்றனர். பயிர் வேர் அழுகாமல் இருக்க இரண்டு தினங்களுக்கு முன்பாகவே நீர் தேக்கி அதனை தற்சமயம் பறித்து வருகிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, அறுவடை செய்யும் நெல்களை தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய கந்தர்வகோட்டை நகரை மையமாக வைத்து தமிழ்நாடு அரசு நூகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் மையம் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நெல் அறுவடை என்பது எல்லா பருவத்திலும் தற்சமயம் நடைபெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

The post கந்தர்வகோட்டை பகுதியில் பின் குறுவை நடவுக்கு நாற்று பறிக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: