பெரம்பலூர் மாவட்டத்தில் வழிபறியை தடுக்க 32 இடங்களில் கேமரா 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

 

பெரம்பலூர், ஜூலை 21: பெரம்பலூர் மாவட்ட விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- வருகிற 26ம்தேதி நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்ட விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26 ஆம்தேதி வெள்ளிக் கிழமை காலை 10.30 மணி யளவில், பெரம்பலூர் மாவ ட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்டமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற் கும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை சம்மந் தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவி கள், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற் கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றிய தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என மாவட் டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் வழிபறியை தடுக்க 32 இடங்களில் கேமரா 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: