அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் உட்பட 9 பேர் காயம்

 

திருப்புவனம், ஜூலை 21:மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூருக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸை மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த ஜெயபிரபு (38) ஓட்டி வந்தார். பஸ் பச்சேரி இந்திரா நகரை கடந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் கவிழ்ந்தது. பஸ்சுக்குள் சிக்கியவர்களை கிராம மக்கள் விரைந்து வந்து மீட்டனர். டிரைவர் ஜெயபிரபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மற்ற பயணிகள் 8 பேரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பாச்சேத்தி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் உட்பட 9 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: