இந்நிலையில், திரிபுரா அரசியல் கட்சியான திப்ரா மோதா தலைவர் பிரத்யோத் கிஷோர் மாணிக்யா டெபர்மா தனது பேஸ்புக் பதிவில், ‘‘கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தில் அமைதியின்மை ஏற்படும் போதெல்லாம் திரிபுரா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வரலாறு சொல்கிறது. தற்போது வங்கதேசத்தின் உறுதியற்ற தன்மை திரிபுரா, அசாம், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களை உடனடியாக பாதிக்கிறது. குறிப்பாக சட்டவிரோத இடம்பெயர்வுகள் பழங்குடியின மக்களை பாதிக்கிறது. அவர்களின் நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்படுகிறது. எனவே, எல்லையில் அதிக எச்சரிக்கையுடன் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறேன்’’ என கூறி உள்ளார்.
The post வங்கதேசத்தில் வன்முறை திரிபுரா எல்லையில் கூடுதல் எச்சரிக்கை: திப்ரா தலைவர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.