ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் போலீஸ் விசாரணை..!!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளுக்கு அஞ்சலை பணம் தந்தது தெரியவந்ததால் அவரது 2 வங்கி கணக்கு விவரங்களை போலீஸ் திரட்டி வருகிறது. ஆம்ஸ்ட்ராங்கை கொன்றால் வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தலாம் என பொன்னை பாலுவை மூளைச்சலவை செய்தது தெரியவந்துள்ளது.

அஞ்சலையிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை

பாஜக முன்னாள் நிர்வாகி புளியந்தோப்பு அஞ்சலையிடம் போலீசார் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளுக்கு அஞ்சலை கொடுத்த பணம் எவ்வளவு?

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணம் கொடுத்ததுடன் தங்குமிடமும் ஏற்பாடு செய்ததாக அஞ்சலை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை 4 இடங்களில் நடந்த சதி ஆலோசனை

ஆம்ஸ்ட்ராங்கை கொல்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை 4 இடங்களில் சதி ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிய வந்துள்ளது. புழல், அரக்கோணம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: