தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூலை 20:தூத்துக்குடி மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைதொடர்பு துறை ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் கோரிக்கைகளைவிளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்துக்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பிஎஸ்என்எல் சொத்துக்கள் திருடப்படாமல் தடுத்து நிறுத்த வேண்டும், தேவையற்ற பொருட்களை உடனடியாக மீட்டு, முறையான ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மரியஹெலன் ஷீபா நன்றி கூறினார்.

The post தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: