குளத்தூரில் மாநில கபடி போட்டி

குளத்தூர், ஜூலை 20: குளத்தூரில் மாநில கபடி போட்டியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். குளத்தூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயதத்திற்கு பாத்தியப்பட்ட முத்துமாலையம்மன் கோயில் ஆனித்திருவிழாவையொட்டி அபிமன்யூ விளையாட்டுக்கழகம் சார்பில் 8ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டிகள் நடந்தது. மார்க்கண்டேயன் எம்எல்ஏ கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, துணைச்செயலாளர் ராஜபாண்டி, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் முனியசாமி, முருகேசன், சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், பொறியாளர் ரெங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக அளவில் 20அணிகள் கலந்து கொண்டு விளையாடியதில் முதல் இடம் பிடித்த திருச்சி போலீஸ் அணிக்கு முதல் பரிசு ₹1லட்சம் மற்றும் கோப்பை வழங்கினர். இரண்டாவது இடம் பிடித்த மணிமுத்தாறு போலீஸ் அணிக்கு ₹60ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கினர். மூன்றாவது இடம் பிடித்த கரூர் சேரன் கல்லூரி அணிக்கு ரூ 30ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அபிமன்யூ கபடி கழகம் செய்திருந்தனர்.

The post குளத்தூரில் மாநில கபடி போட்டி appeared first on Dinakaran.

Related Stories: