மின்சார வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுவது மக்களிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால் இல்லை. வேறு வழியில்தான் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தனியாரிடம் வசூலிக்க வேண்டிய 9 ஆயிரம் கோடிக்கு மேலான சர் சார்ஜ் கட்டணத்தை 5 ஆண்டுகளுக்கு வசூலிக்காமல் விட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ரூ.1560 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தனியாருக்கு சாதகமாக செயல்படுகிறது. 1.20 கோடி பேருக்கு பாதிப்பு இல்லை என அரசாங்கம் சொல்கிறது. ஆனால் மீதமுள்ள 2 கோடி பேருக்கு பாதிப்பு இருக்கிறது. உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் இதுவரை 5 ஆண்டுகளில் 27,789 கோடி இழப்பீடு மாநில அரசு வழங்கியுள்ளது. இந்த ஆண்டு 17 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இது சுகாதாரத்துறை, உயர்கல்வி துறைக்கு ஒதுக்கிய நிதியை விட அதிகம். இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post உதய் மின் திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு 5 ஆண்டுகளில் ரூ.28,000 கோடி இழப்பு: மின்துறை பொறியாளர்கள் அமைப்பு தகவல் appeared first on Dinakaran.