கிருஷ்ணகிரி, ஜூலை 20: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அப்துல் கரீம் தெருவை சேர்ந்தவர் இம்ரான். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ராaயக்கோட்டையில் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி விட்டு சென்ற அப்துல் கரீம், நேற்று காலை வந்தபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ₹16 ஆயிரம் மதிப்பிலான 8 பழைய செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி அவர் ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post செல்போன் சர்வீஸ் கடையில் திருட்டு appeared first on Dinakaran.
