மதுரை, ஜூலை 19: மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதவியாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமையில் குறுகிய கால பயிற்சி நேற்று தொடங்கியது.
பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், இரு தினங்கள் நடைபெறும் இப்பயிற்சியில், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் க.வாஞ்சிநாதன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர் மற்றும் முதன்மை வருவாய் அலுவலர் மு.அமிரதா, பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய துணைப்பதிவாளர் மற்றும் முதல்வர் கே.வசந்தி மற்றும் மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் ம.தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக சேர்ந்த உதவியாளர்களுக்கு பயிற்சிகளை அளித்தனர்.
The post கூட்டுறவு நிறுவனங்களின் உதவியாளர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.