தேடுதல் பணியை முடித்து கொண்டு இரவு நேரத்தில் வீரர்கள் திரும்பி வந்தனர். டர்ரம் என்ற இடத்தில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்தது. இதில், அதிரடிப்படை வீரர்களான பரத் சாகு,சத்யேர் சிங் காங்கே ஆகியோர் பலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு கூடுதலாக படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதில் பலியான வீரர்களுக்கு மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய் இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் பதிவிடுகையில்,பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது. பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும்,படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
The post சட்டீஸ்கரில் பயங்கரம் நக்சலைட் கண்ணிவெடியில் சிக்கி அதிரடிப்படை வீரர்கள் 2 பேர் பலி: 4 பேர் காயம் appeared first on Dinakaran.