கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது

தேன்கனிக்கோட்டை, ஜூலை 19: கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தடிகல், குடியூர் கிராமம் முத்துபசப்பா மகன் ருத்ரன் (28), அதே பகுதியை சேர்ந்த சிக்கண்ணா மகன் மல்லேஷ் (30). இவர்கள் கடந்த மே மாதம் 30ம்தேதி, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில், கெலமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன் பேரில் ருத்ரன், மல்லேஷ் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, கலெக்டர் சரயு உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை சேலம் சிறையில் உள்ள ருத்ரன், மல்லேஷ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

The post கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: