இளம்பெண் கடத்தல் வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி, அக்.10: தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அருகேயுள்ள கே.ஓசூர் பகுதியை சேர்ந்த 19வயது இளம்பெண், அச்சட்டிப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பலஇடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர், கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதில், திப்பசந்திரம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(22) என்பவரை தங்கள் மகள் காதலித்து வந்தார். அதனால் சக்திவேல் ஆசை வார்த்தையை கூறி, தங்கள் மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண் கடத்தல் வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: