இடையன்குளம் பள்ளியில் அன்பாடும் முன்றில் நிகழ்ச்சி

களக்காடு, ஜூலை 17: இடையன்குளம் அமீர்ஜமால் மேல் நிலைப்பள்ளியில் அன்பாடும் முன்றில் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பாலன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முகைதீன்பிள்ளை வரவேற்றார். தாசில்தார் இசக்கிபாண்டி, வட்டார கல்வி அலுவலர் ரஜியா பானு, களக்காடு சப். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் விஜயராணி, பெண்களுக்கான உதவி மைய அலுவலர் செல்வராணி, வட்டார வள மைய பயிற்றுனர் சங்கர் துரை ஆகியோர் அன்பாடும் முன்றில் குறித்து கருத்துரை வழங்கினர். முதுகலை இயற்பியல் ஆசிரியர் செந்தில்வேல் முருகன் நன்றி கூறினார்.

The post இடையன்குளம் பள்ளியில் அன்பாடும் முன்றில் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: