வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

 

பெரியகுளம், ஜூலை 17: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜல்லிப்பட்டி பெத்தனசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராம் (31). இவரது மாமனார் பெருமாளுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இதன் அருகே உள்ள ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் செழியன். இவரது மகன்கள் ஜெகதீஸ், வினோத். தோட்டம் தொடர்பாக பெருமாளுக்கும், செழியனுக்கும் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் பெருமாளின் தோட்டத்தை பார்ப்பதற்கு முத்துராம் சென்றுள்ளார்.

வழியில் அவரை மறித்த செழியன், ஜெகதீஸ், வினோத் ஆகியோர் தோட்டம் தொடர்பாக பிரச்னை உள்ளதால், அதனை பார்க்க செல்லக் கூடாது என்று கூறியுள்ளனர். இதில் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செழியன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து, முத்துராமை சரமாரியாக கம்பால் தாக்கியுள்ளனர். இதில் முத்துராம் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். புகாரின்பேரில் 3 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: