திருவள்ளூர் எம்ஜிஎம் நகர், ஏஎஸ்பி நகரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்காக்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி 11வது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.எம் நகரில் ரூ.47 லட்சம் மதிப்பிலும், 13வது வார்டு ஏஎஸ்பி நகரில் ரூ.33.75 லட்சம் மதிப்பிலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.

நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு, பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் சரவணன், கவுன்சிலர்கள் வசந்தி வேலாயுதம், நீலாவதி பன்னீர்செல்வம், பிரபு, பிரபாகரன், சாந்தி கோபி, அயூப் அலி, பாபு, ராஜ்குமார், செல்வகுமார், இந்திரா பரசுராமன், சீனிவாசன், விஜயகுமார், விஜயலட்சுமி கண்ணன், தனலட்சுமி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு பூங்காவை திறந்து வைத்தார். இதில் நிர்வாகிகள் பொன் பாண்டியன், நேதாஜி, கமலக்கண்ணன், ரவி, பரசுராமன், சம்பத்ராஜா, சீனிவாசன், சிவக்குமார், சேகர், காஞ்சிப்பாடி சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆணழகன் திலீபன் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் 11வது வார்டு கவுன்சிலர் ஜான், 13வது வார்டு கவுன்சிலர் பத்மாவதி ஸ்ரீதர் ஆகியோர் நன்றி கூறினர்.

The post திருவள்ளூர் எம்ஜிஎம் நகர், ஏஎஸ்பி நகரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்காக்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: