வரதட்சணை கொடுமையால் விஷம் குடித்து மருமகள் தற்கொலை: மாமனார், மாமியார் உள்ளிட்ட 4 பேர் மீது புகார்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த நாலூர் அண்ணா நகரைச் சேர்ந்த சீனு என்பவரின் மகள் ரேவதி (26) என்பவருக்கும், மீஞ்சூரை சேர்ந்த டிரைவரான முத்தழகு (30) என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ருத்ரா (6) என்ற மகளும், குருசரண் (3) என்ற மகனும் உள்ளனர். திருமணமான 6 மாதத்தில் மாமியார் சாந்தி, மாமனார் மாரி, நாத்தனார் மாலா, சித்திரா ஆகிய 4 பேரும் வரதட்சணை மற்றும் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த காணப்பட்ட ரேவதி வீட்டில் விவசாயத்துக்கு வைத்திருந்த கொக்கு மருந்தை குடித்துள்ளார். அப்போது வீட்டின் அருகே இருந்தவர்கள் அவரை உடனடியாக ஆட்டோவில் ஏற்றி மீஞ்சூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி மருத்துவமனைக்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தன்னுடைய மகள் இறப்புக்கு காரணமான மாமனார், மாமியார், நாத்தனார்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இறந்த பெண்ணிண் தந்தை சீனு என்பவர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வரதட்சணை கொடுமையால் விஷம் குடித்து மருமகள் தற்கொலை: மாமனார், மாமியார் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: