ஆணவ படுகொலை: தனி சட்டம் கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 16: ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் ,இயற்றக்கோரி, திராவிட விடுதலை கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் மப.மணியமுதன் தலைமை தாங்கினார். மாநில பரப்புரை செயலளர் பால் பிரபாகரன், விசிக மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பசும்பொன் பாண்டியன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அருப்புக்கோட்டையில் நடந்த அழகேந்திரன் ஆணவ படுகொலையை கண்டித்தும், இவற்றைத் தடுக்கக் கோரியும் ஆணவ படுகொலைகளுக்கு தனி சட்டம் இயற்றவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

The post ஆணவ படுகொலை: தனி சட்டம் கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: