அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

 

சிவகங்கை, ஜூலை 14: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ஆனி மாதம் 8 நாட்களுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்தாண்டு பூச்சொரிதல் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி பக்தர்கள் பூக்குழி இறங்குதல், அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

முக்கிய விழாவான பூச்சொரிதல் விழாவில் குழந்தையை மடியில் வைத்தபடி அம்மனுக்கு சர்வ அலங்காரம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றம் கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

The post அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா appeared first on Dinakaran.

Related Stories: