இந்த நிலையில் ஓமன் நாட்டின் சலாம் ஏர் விமான நிறுவனம் மஸ்கட் சென்னை இடையே புதிய நேரடி விமான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது. வாரத்தில் வெள்ளி ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படும் சலாம் ஏர் விமானம் மஸ்கட்டில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தை அடையும். பின்னர் மீண்டும் சென்னையிலிருந்து அதிகாலை 5 மணிக்கு மஸ்கட் புறப்படும் சென்னையிலிருந்து மஸ்கட் செல்லும் ஒரு வழி பயணத்திற்கு சலாம் ஏர் நிறுவனம் 10,500 ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து சென்னை மஸ்கட் இடையேயான விமான சேவையை வாரம் முழுவதும் விரிவாக்கம் செய்ய சலாம் ஏர் திட்டமிட்டுள்ளது.
The post சென்னை-மஸ்கட் இடையே கூடுதலாக புதிய நேரடி விமான சேவையை தொடங்கியது சலாம் ஏர்” நிறுவனம்..!! appeared first on Dinakaran.