பிறந்தநாளை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள மாவீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘‘பீரங்கி நெஞ்சைப் பிளந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன், ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை எனச் சீறிய கட்டாலங்குளத்துச் சிங்கம் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் இன்று. அவரது வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
The post அழகு முத்துக்கோன் வீரம் அணையா நெருப்பாய் தமிழர் நெஞ்சங்களில் என்றும் சுடர்விடும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.