தேவநேய பாவாணருக்கு நினைவிடம் அமைக்கக்கோரிய வழக்கு: அரசிடம் விளக்கம் பெற்று பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: தேவநேய பாவாணருக்கு நினைவிடம் அமைக்கக்கோரிய வழக்கில் அரசிடம் விளக்கம் பெற்று பதில்தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. தென்காசி கோமதிபுரத்தில் தேவநேய பாவணருக்கு நினைவிடம் அமைக்க உத்தரவிடக்கோரி ஜெபா ஜெயவீரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். சங்கரன்கோவில் நகரில் நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் கிளையில் மனுதாரர் முறையீடு செய்தார். தேவநேய பாவாணர் பிறந்த கோமதிபுரத்தில் நினைவிடம் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அரசின் பதில் பெற்று மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 18-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.

The post தேவநேய பாவாணருக்கு நினைவிடம் அமைக்கக்கோரிய வழக்கு: அரசிடம் விளக்கம் பெற்று பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: