காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்

ராமநாதபுரம், ஜூலை 10: பெங்களூரில் இருந்து ராமநாதபுரத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட 39 மூட்டை புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரில் இருந்து காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக ராமநாதபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் ராமநாதபுரம் நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் வந்த இரண்டு பேர், ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நாகராஜ்(58) என்பவரிடம் புகையிலை மூட்டைகளை கொடுக்கும் போது கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு சென்றபோது தப்பித்து ஓடினர். இதில் புகையிலை மூட்டைகளை வாங்கிய வியாபாரி நாகராஜ் சிக்கினார். அவரிடம் இருந்து 15 பாக்கெட் கொண்ட 55 பண்டல்களை கொண்ட 39 மூட்டை புகையிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

The post காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: