அரசியல் கடந்து வன்னியர்கள் சிந்தித்துப் பார்த்தால் வன்னியர் சமூகத்திற்கு எந்த கட்சி ஆட்சி காலத்தில் நன்மைகள் நடந்துள்ளன என்பது புலப்படும். நேற்று கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சி காலத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு நடந்த நன்மைகள் குறித்து பட்டியலிட்டுள்ளார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வன்னியர்களுக்கு கிடைத்த நன்மைகள் எல்லாம் திமுக ஆட்சியில் கலைஞரால் மட்டுமே நடந்துள்ளது என்பதை எவராலும் மறந்து விட முடியாது. எனவே விக்கிரவாண்டி தொகுதி வன்னிய வாக்காளப் பெருமக்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு முன் சிந்தித்துப் பார்த்து உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளிப்பதன் மூலம் மேலும் வன்னியர்களுக்கானத் திட்டங்களை பெற்றிட வாய்ப்பாக அமையும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post நன்மைகள் திமுக ஆட்சியில் மட்டுமே நடந்துள்ளது; விக்கிரவாண்டி தொகுதி வன்னியர்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்: விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வேண்டுகோள் appeared first on Dinakaran.