3 சட்டங்களை ஆராய ஆணையம் – ப.சிதம்பரம் வரவேற்பு

சென்னை: 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஆணையம் அமைத்த தமிழ்நாடு அரசின் முடிவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த 3 குற்றவியல் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், போலீஸ், சட்ட அறிஞர்கள் உட்பட அனைத்து தரப்பினருடன் ஆணையம் ஆலோசனை நடத்த வேண்டும். நீதித்துறையின் நவீன கோட்பாடுகளுடன் ஒத்துப்போகும் குற்றவியல் சட்டங்களை நாம் இயற்ற வேண்டும் என்று கூறினார்

The post 3 சட்டங்களை ஆராய ஆணையம் – ப.சிதம்பரம் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: