மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்

மதுரை, ஜூலை 6: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணல் நேற்று நடந்தது. மதுரை மாநகராட்சியில் மேல்நிலை, உயர்நிலை மற்றும் ஆரம்பப்பள்ளி என மொத்தம் 64 பள்ளிகள் உள்ளன. இவற்றில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்த பலர் ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்பட பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் பணியிடம் காலியானது. இதனை நிரப்ப மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார், கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர். இதற்காக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் செனாய்நகரில் உள்ள இளங்கோ பள்ளியில் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களை சேர்க்க நேர்முகத்தேர்வு கல்விப்பிரிவு அலுவலர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது இதற்கு கண்காணிப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் 30க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் appeared first on Dinakaran.

Related Stories: