மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி

இடைப்பாடி, ஜூலை 4: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசுப்பள்ளியில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ், இந்துஜா லைலாண்ட் நிறுவனத்தின் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் சிஇஓ கபீர், இந்துஜா லைலாண்ட் நிறுவன அலுவலர்கள் ஸ்ரீவித்யா ராமசாமி, சீனிவாசன் ரங்கராஜன், சிஎஸ்ஆர் தலைமை அதிகாரி பாலச்சந்தர், சசிகுமார், மாவட்ட கல்வி அலுவலர் கோபாலப்பா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: