ஓமலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓமலூர், ஜூலை 4: ஓமலூர், காடையாம்பட்டி தாலுகா அலுவலகங்கள் முன்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற தேர்தலின் போது, தமிழக முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்தவேண்டும். 21 மாத கால ஊதியமாற்று நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் ஆகிய உரிமைகளை வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி, கிராம உதவியாளர், ஊரக நூலகர், செவிலியர் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

The post ஓமலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: