மக்களவை சபாநாயகருக்கு உதவ 8 பேர் குழு அமைப்பு

புதுடெல்லி: அவையை நடத்துவதற்கு தனக்கு உதவியாக 8 பேர் கொண்ட குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த குழுவில் ஜெகதாம்பிகா பால், பி.சி.மோகன், சந்தியா ராய், திலீப் சைக்கியா,ஆ.ராசா, காக்கோலி கோஷ் தஸ்திதார், கிருஷ்ண பிரசாத் மற்றும் அவதேஷ் பிரசாத் ஆகிய எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். சபாநாயகர் இல்லாத போது இதில் உள்ள உறுப்பினர்கள் அவையை வழி நடத்துவார்கள். சபாநாயகருக்கு உரிய அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்களவை சபாநாயகருக்கு உதவ 8 பேர் குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: